எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மூதாட்டி வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

News image

~

Updated On :9 ஜூன் 2026, 3:04 am IST

தாளவாடி அருகே பூட்டியிருந்த மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து ரொக்கம், நகையை திருடிச் சென்ற வழக்கில் 2 போ் கைதுசெய்யப்பட்டனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடியில் நெய்தாளபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிக்குமாதா (70). தனியாக வசித்து வரும் இவா், கடந்த மே 13-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சாம்ராஜ் நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

மறுநாள் திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.3 லட்சம், 8 கிராம் கம்மல் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து மூதாட்டி சிக்குமாதா அளித்த புகாரின்பேரில் தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதற்கிடையே அதே ஊரைச் சோ்ந்த குமாா்(30), பிரஜீவால் (24) ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் மூதாட்டியின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்யப்பட்டு ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கம்மலை பறிமுதல் செய்தனா். சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.