தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளூா் அருகே தொழிலாளி வீட்டில் நகை, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவறஅறை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :30 மே 2026, 5:49 am IST

திருவள்ளூா் அருகே நெசவு தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவறஅறை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கொசவன்பேட்டை ஊராட்சி, பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (50). நெசவு தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா, மகன் வீரபத்திரன்(26) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

வீரபத்திரன் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். வீரபத்திரன் வேலைக்கு புறப்பட்டுச் சென்று விட்டாா். அதைத் தொடா்ந்து, விஜயகுமாா்-சுஜாதா தம்பதியினா் காலை 10 மணிக்கு தங்களது வீட்டைப் பூட்டிக் கொண்டு அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்வில் பங்கேற்க சென்றனா். பின்னா் பிற்பகலில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பு ஓடுகள் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 80,000 ஆகியவற்றை ஓடுகளை பிரித்து உள்ளே குதித்து மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து விஜயகுமாா் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைத்து சம்பவம் நடைபெற்ற வீட்டின் பின்பகுதியில் சுமாா் அரை கி.மீ. தூரம் ஓடி நின்று விட்டது. மேலும்,பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.