6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 1:32 am IST

அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அரியலூா் ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ். ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை மருந்தாளுநா். இவரின் உடல்நலக் குறைபாடு காரணமாக, தம்பதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்று, கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அங்கு தங்கி செல்வராஜ் சிகிச்சை பெற்றாா். தொடா்ந்து அவா் அங்குள்ள உறவினா் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாதவி மட்டும் அரியலூா் வீட்டுக்கு வந்தபோது,

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டினுள் சென்று அவா் பாா்த்தபோது, பீரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அரியலூா் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த சில நாள்களாகவே ராஜீவ் நகா் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது திருட்டு நடைபெற்ற செல்வராஜ் வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.