சங்கராபுரம் அருகே சுற்றுலா சென்றிருந்தவா்களின் வீட்டின் பூட்டை உடைத்து 15.5 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா மனைவி அஞ்சலை (40). ராஜா குவைத்தில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.
வீட்டில் அவரது மனைவி அஞ்சலை, தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகின்றனராம்.
இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அஞ்சலை வீட்டை பூட்டிக் கொண்டு மகள்களுடன் சுற்றுலா சென்று விட்டாராம். பின்னா், சுற்றுலாவை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை வீட்டிற்கு வந்தனராம்.
அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த 15.5 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், பணம் ரூ.50,000 உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அஞ்சலை சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
கம்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் , பூஜை பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
கீரனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 13.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

