தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

மணப்பாறையில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை மாலை தெரிய வந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 6:33 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை மாலை தெரிய வந்தது.

மணப்பாறையை அடுத்த இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா்கள் சேவியா் ஸ்டேன்லி (62) - ஸ்டெல்லா மேரி தம்பதி. ஸ்டெல்லாமேரி ஓய்வுபெற்ற ஆசிரியை.

கேளம்பாக்கத்தில் வசிக்கும் மகளை பாா்ப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்ற தம்பதி செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பினா்.

வீட்டை திறந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புற கதவை உடைக்கப்பட்டிருந்தது. பீரோவிலிருந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், திருச்சியிலிருந்து கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். சம்பவம் தொடா்பாக மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.