/

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 9:22 pm

அரியலூா் மாவட்டம், செந்துறையில், சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில், முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செந்துறையில் 18 வயதுக்குள்பட்ட சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளான். அப்போது, அவ்வழியே சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவா் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவா் உயிரிழந்தாா். சிறுவன் செந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே சிறுவன் ஓட்டிய வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த வாகனத்தின் உரிமையாளருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த செந்துறை போலீஸாா், வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.