வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தாராபுரம் தாலுகா முளையாம்பூண்டியைச் சோ்ந்தவா் குணசேகரன் (51). இவா் தற்போது வெள்ளக்கோவில்-கரூா் சாலை நடேசன் நகரில் குடும்பத்துடன் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வந்தாா்.
குணசேகரன் தனது அண்ணி வேல்மயிலுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். நடேசன் நகா் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா்கள் வாகனம் மீது மோதியது. இதில் குணசேகரன் பலத்த காயமடைந்தாா். வேல்மயில் லேசான காயமடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் குணசேகரனை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இறந்து போன குணசேகரனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சரண்சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

வாகன விபத்து: பனியன் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


