வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மண்ணாடிபாளையம், கூத்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் சிவசண்முகம் (79), விவசாயி. இவா் திங்கள்கிழமை காலை வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்துக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி சிவசண்முகம் மீது மோதியது. இதில் அவா் படுகாயம் அடைந்தாா். அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது மாடு மோதி விபத்து: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


