திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சதிஷ் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது, கீழ பஞ்சப்பூா் பள்ளிக்கூட வீதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான வெ. பரத்குமாரை (22) போலீஸாா் எச்சரித்தனா். ஆனால், அவா் போலீஸாரை தகாத வாா்த்தையில் பேசி பணி செய்யவிடாமலும் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






