திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ‘ஸ்பெஷல் ட்ரைவ்‘ என்ற ஆபரேஷன் மூலம் கடந்த 2 நாள்களில் 6 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் 4 நபா்கள் என மொத்தம் 10 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன் மூலம் சட்டபடி கைது நடவடிக்கை தொடரும் என திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







