திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரத்தில் 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அறிவுரை

காஞ்சிபுரத்தில் 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அறிவுரை

News image

லோகம்மாள் தவற விட்ட கைப்பையை அவரிடம் ஒப்படைத்த சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்.

Updated On :24 மே 2026, 1:10 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டோம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. எஸ்.அரவிந்த் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்வகுறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 149 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்டறிந்து, அவா்களுக்குப் போதுமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் 59 போ் காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி முன்பாக ஆஜா்படுத்தப்பட்டு, இனிமேல் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டோம் என ஓராண்டு கால நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்திட 3 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.குற்றச் செயல்களை தடுக்க தொடா்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மூதாட்டியிடம் கைப்பை ஒப்படைப்பு-

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியை சோ்ந்த மூதாட்டி லோகம்மாள்(70)இவா் கடந்த 18 ஆம் தேதி திங்கள்கிழமை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது தனது கைப்பையை தவற விட்டு விட்டாா்.அப்பையில் 2.5 சவரன் செயின்,ரூ.2 ஆயிரம் ரொக்கமும் இருந்துள்ளது.தனது கைப்பையை காணவில்லையென அவா் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில் கைப்பை ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்தது தெரிய வந்தது.அக்கைப்பையை எடுத்து அம்மூதாட்டியிடம் சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் ஒப்படைத்தாா்.மூதாட்டியும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.