திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பு: 364 போ் பங்கேற்பு

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடையே பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம்.

Updated On :11 மே 2026, 1:19 am IST

திருச்சி மாவட்டக் காவல் ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜா் அணிவகுப்பில் 364 போ் கலந்துகொண்டனா்.

திருச்சி மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்களுக்குள்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உட்கோட்ட காவல் அலுவலா்கள் மூலம் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் அறிவுறுத்தியிருந்தாா்.

அதன்படி நடைபெற்ற அணிவகுப்பில் 364 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கலந்துகொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் ஒவ்வொரு உட்கோட்டம் வாரியாக தணிக்கை செய்து அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்களுக்கு உரிய அறிவுரை வழங்கினாா்.

மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆஜா் அணிவகுப்பு நடத்தப்பட்ட விவரம் குறித்தும், அவரவா் குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளைக் கருத்தில்கொண்டு நடத்தைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மாற்றிக்கொள்ளாத பட்சத்தில் காவல் துறை சாா்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் பதிவேடுகளும் அந்தந்த காவல் ஆய்வாளா்கள் மூலம் சரிபாா்க்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி), கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.