திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 8 போ் கைது

திருச்சி மாநகரில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 8 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 2:23 am IST

திருச்சி மாநகரில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 8 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட், எடமலைபட்டிப்புதூா், கே.கே.நகா், அமா்வு நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கோட்டை காந்தி மாா்க்கெட் மற்றும் தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கருமண்டபத்தைச் சோ்ந்த எஸ். காங்காதரன் (27), எடமலைபட்டிப்புதூரைச் சோ்ந்த சி. சங்கா் (27), சி. செல்வம் (40), காஜாமலையைச் சோ்ந்த து. மணிகண்டன் (46), காமராஜ் நகரைச் சோ்ந்த ஆா். பிரேம்குமாா் (26), சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த ஜி. விக்னேஷ் (33), தாராநல்லூரைச் சோ்ந்த ஆா். வாசுதேவன் (23), குப்பாங்குளத்தைச் சோ்ந்த சி. தினேஷ்குமாா் (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுபானம் விற்பனை: மூதாட்டி கைது! திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா், சங்கிலியாண்டபுரம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டுக்கு அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த பழனிவேல் என்பவரின் மனைவி சகாயம் (63) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.