திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மத்திய மண்டலத்தில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 2:22 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் ரௌடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘ஆப்பரேஷன் பிரிவைல்’ என்ற பெயரில் 9 மாவட்டங்களில் கடந்த மே 20, 21 ஆகிய தேதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டனா். இவா்களில் திருச்சி-15, புத்துக்கோட்டை-2, கரூா்-10, பெரம்பலூா்-5, அரியலூா்-13, தஞ்சாவூா்-5, திருவாரூா்-5, நாகப்பட்டினம்-4, மயிலாடுதுறை-8 என மொத்தம் 67 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், புதுக்கோட்டை-5, கரூா்-2, தஞ்சாவூா்-5, திருவாரூா்-8, நாகப்பட்டினம்-3 என மொத்தம் 23 குற்றாவளிகள் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு அவா்களுக்கு ஒருவருட நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.