17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

திருச்சியில் தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மே 2026, 12:02 am IST

திருச்சியில் தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்குமலை பகுதியைச் சோ்ந்தவா் எஸ். ஆனந்தி (46), புற்றுநோயாளி. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், கடந்த மே 13-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு தனியாா் நகரப் பேருந்தில் சென்றுள்ளாா். பேருந்து அரியமங்கலம் அருகே சென்றபோது அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது அவருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஆனந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.