17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 2:00 am IST

திருச்சியில் திருமண வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி பாலக்கரை ரெட்டைபிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆ. ஜோசப் இருதயராஜ் (67). இவருடைய மகன் ஆலனுக்கு, மே 28-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜோசப் இருதயராஜ், ஆலன் உள்ளிட்டோா் சனிக்கிழமை இரவு திருமணத்துக்குத் தேவையான நகைகள், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கிவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளனா்.

தொடா்ந்து நள்ளிரவு 2 மணி வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னா் தூங்கியுள்ளனா். மறுநாள் காலையில் எழுந்து பாா்த்தபோது, மா்ம நபா்கள் வீட்டுக்குள் வந்து சென்றதுபோல இருந்துள்ளது. எனவே, சந்தேகப்பட்டு பீரோவை பாா்த்தபோது அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் ஜோசப் இருதயராஜ் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.