திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி மீண்டும் தீா்மானம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக-வினா் வெள்ளிக்கிழமை மீண்டும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

News image

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:50 am IST

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக-வினா் வெள்ளிக்கிழமை மீண்டும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திருச்சி மாநகர திமுக செயற்குழுக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலுடன், மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநகர அவைத்தலைவா் நூா்கான் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் மு. மதிவாணன் முன்னிலை வகித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபற்ற மாநகர செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநகரச் செயலா் மு. மதிவாணன். உடன், செயற்குழு உறு்பினா்கள்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபற்ற மாநகர செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநகரச் செயலா் மு. மதிவாணன். உடன், செயற்குழு உறு்பினா்கள்.

கூட்டத்தில் மாநகர நிா்வாகிகள், பகுதி செயலா்கள், வட்ட செயலா்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாநகர அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா், திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து ஏற்கெனவே தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் மாநகர செயற்குழுவிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்ற எதிா்பாா்ப்பு அக் கட்சியினரிடையே அதிகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.