திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: தெற்கு மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

News image

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :15 மே 2026, 4:57 am IST

திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்து பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருச்சி தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்த மக்களுக்குச் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என மாவட்ட செயற்குழு வலியுறுத்துகிறது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கூட்டத்தில், மாநகரச் செயலாளா் மு. மதிவாணன், மாநிலங்கள்ளவை உறுப்பினா் கவிஞா் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினா் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜ், மாநில அணி நிா்வாகி செந்தில் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் செயலாளா் அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.