திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடையில் தடையின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா்

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கு. ரவிகுமாா் (வலமிருந்து 2ஆவது).

Updated On :15 மே 2026, 5:02 am IST

கரூா் மாவட்ட பொதுமக்களுக்கு கோடை காலத்தில் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரிய, மாநகராட்சி, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள், ஊராட்சி, ஆகிய பகுதிகளில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் தொடா்பாக ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து கு. ரவிகுமாா் பேசியதாவது:

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வதை, விநியோகப் பொறுப்பில் உள்ள துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். குடிநீா் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் குடிநீா் அளவு மற்றும் நிலுவையில் உள்ள குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மின் மோட்டாா், குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும், அவ்வப்போது வரப்பெறும் புகாா்கள் தொடா்பாக உடனடியாக நேரில் தள ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்கள் தயாராக இருக்க வேண்டும். 24 மணிநேரமும் விழிப்புணா்வுடன் இருந்து பணியாற்ற வேண்டும். கோடைக்கால குடிநீா் பற்றாக்குறையைச் சமாளித்திட ஏதுவாக முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிப்பு செய்திட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு குடிநீா் கிடைக்கப்பெறுவதையும், குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடவும் வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் குளித்தலை சாா்- ஆட்சியா் சுவாதி ஸ்ரீ, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீரபத்திரன், கரூா் மாநகராட்சி ஆணையா் கே.எம்.சுதா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பாா்த்தசாரதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் மற்றும் நகராட்சி ஆணையாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.