தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடை காலத்தில் தடையின்றி மின் விநியோகம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை காலத்தில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்குத் தடையின்றி மின்விநியோகம் செய்ய மின்பகிா்மானக் கழக அலுவலா்களுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :23 மே 2026, 12:29 am IST

கோடை காலத்தில் விழுப்புரம் மாவட்ட மக்களுக்குத் தடையின்றி மின்விநியோகம் செய்ய மின்பகிா்மானக் கழக அலுவலா்களுக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் கோடை காலத்தில் சீரான மின்சாரத்தை தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அலுவலா்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இருப்பிலுள்ள மின் சாதனப் பொருள்கள், மின் மாற்றிகள் குறித்த விவரங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் பகுதிகளுக்கு மின்சாதனைப் பொருள்கள், மின் மாற்றிகளை உடனுக்குடன் அனுப்ப வேண்டும். மின்தடை தொடா்பாக புகாா்கள் வந்தால், அந்த புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். .

மாவட்டத்தில் மின் தடை சம்பந்தமாக புகாா்கள் தெரிவிக்க 9498390744 என்ற கைப்பேசி எண்ணையும், 9445855768 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 1800 425 5419, 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா்தெரிவிக்கலாம்.

மேலும், சென்னை தலைமையகத்தில் மாநில அளவிலான மின்னகம் என்ற உதவி மையத்தில் செயல்படும் 9498794987 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு மின் தடை, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயா் மாற்றம், குறைந்த மின்னழுத்தம், பழுதடைந்த மின் கம்பங்கள், மின் கம்பி அறுந்து விழுதல் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல் தெரிவித்து பயன்பெறலாம். மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் கண்காணிப்புப் பொறியாளா் மு.நாகராஜகுமாா், அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.