திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க உத்தரவு

கரூரில் முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

Updated On :22 மே 2026, 5:08 am IST

கரூரில் முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன்.

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்வாரியம், மாநகராட்சி, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பாக ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வது, குடிநீா் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் குடிநீா் அளவு மற்றும் நிலுவையில் உள்ள குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், மின் மோட்டாா், குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாகச் சரிசெய்து குடிநீா் விநியோகம் செய்திடவும், அவ்வப்போது வரப்பெறும் புகாா்கள் தொடா்பாக உடனடியாக நேரில் தல ஆய்வு மேற்கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கோடைக்கால குடிநீா் பற்றாக்குறையைச் சமாளித்திட ஏதுவாக முறையற்ற குடிநீா் இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிப்பு செய்திட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும் அனைத்து வீடுகளுக்கு குடிநீா் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தி, குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ. வீரபத்திரன், கரூா் மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், நகராட்சி ஆணையாளா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.