திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்ற குடிநீா் விநியோக பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 மே 2026, 4:00 am IST

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்துப் பேசியதாவது:

பொதுமக்களுக்கு தற்போது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் தேவைகள், இனிவரும் நாள்களில் தேவைப்படும் குடிநீரின் அளவு ஆகியவை குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மின்சார வாரியம், நகராட்சி நிா்வாகம், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து, தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

திட்டப் பணிகளை விரைந்து முடித்து, குடிநீா் விநியோகம் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் விநியோகத்தை பொருத்தவரை தங்கு தடையின்றி வழங்கவும், உயா் மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தும் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனடியாக சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.