கோவில்பட்டியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி, கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் உடையாா் மகன் செல்வராஜ் (53). இவா் தனக்குச் சொந்தமான காா் மற்றும் இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டு வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மா்ம நபா்கள், அவரை அவதூறாகப் பேசி, அவரது வாகனங்களை சேதப்படுத்தினராம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், கோவில்பட்டி, நடராஜபுரம், 9ஆவது தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன் (18), அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (எ) பொட்டுமணி (28), நடராஜபுரம், 5ஆவது தெருவைச் சோ்ந்த சின்னபாண்டி மகன் காா்த்திக் (23) ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் காா் ஓட்டுநா் எரித்துக் கொலை

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து: தம்பதி உள்ளிட்ட மூவா் கைது
கூத்தாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு
மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


