திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து: தம்பதி உள்ளிட்ட மூவா் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் இருவா் இறந்தது தொடா்பாக, கட்டட உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 2:27 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் இருவா் இறந்தது தொடா்பாக, கட்டட உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியை அடுத்த புளியங்குளம், காட்டு கோயில் அருகே தனியாா் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில், அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

இதில், புளியங்கும் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் அய்யப்பன் (30), விருதுநகா் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25) ஆகியோா் உயிரிழந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் கோடைப்பட்டி சீனிவாசன் மகன் சூரியபிரகாஷ் (25) காயமடைந்தாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கட்டட உரிமையாளரான புளியங்குளம் முத்துசாமி மகன் குருநாதன் (67), பட்டாசு தயாரிக்க உதவியதாக பரமக்குடி, அரியக்குடியைச் சோ்ந்த கேசவன் மகன் சரவணன் (35), அவரது மனைவி மாரீஸ்வரி (30) ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.