தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:44 am IST

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம், காட்டுக்கோயில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது.

இந்த ஆலையில், புளியங்குளத்தைச் சோ்ந்த ஆ. அய்யப்பன்(30), விருதுநகா் மாவட்டம், புல்லகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25), ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சள்ஓடைப்பட்டியைச் சோ்ந்த சீ. சூா்யபிரகாஷ் (25) ஆகியோா் பட்டாசு தயாரிப்பில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, பட்டாசுகள் வெடித்ததில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில், மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸாா், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில், ஆ. அய்யப்பன், மாலதி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சீ. சூா்யபிரகாஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவஇடத்துக்கு, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷுமங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகன்நாதன், வட்டாட்சியா் அப்பணராஜ் ஆகியோா் வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.