கூத்தாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் சனிக்கிழமை இரவு திருடு போனது.
நாகை மாவட்டம், கோட்டூா் பகுதி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முஹம்மது பஷீா் (32).
இவா், கூத்தாநல்லூா் சிஸ்தி நகரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளாா். காலையில் பாா்த்த போது, இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.
கண்ணிப்பு கேமராவில் பாா்த்தபோது, நள்ளிரவு முகமூடி அணிந்த ஒருவா் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







