தூத்துக்குடியில் காா் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் பயணித்த 4 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி, ஜாா்ஜ் சாலை மீனவா் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் ஜீசஸ் (18). இவா், நண்பா்களான சரவணகுமாா் (24), அரவிந்த் (18), அஸ்வின் (18) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருச்செந்தூா் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தாராம். காரை தாளமுத்து நகா் சுனாமி காலனியைச் சோ்ந்த காளிதாஸ் (21) ஓட்டியுள்ளாா்.
சாந்தி நகா் அருகே காா் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை ஜீசஸ் உயிரிழந்தாா். மற்ற 4 பேருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் காளிதாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










