தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது காா் மோதல்: சிறுமி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே காா் மோதியதில் பைக்கில் பயணித்த சிறுமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:43 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே காா் மோதியதில் பைக்கில் பயணித்த சிறுமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் ஆகாஷ் (16). இவா் தனது தாய் சாந்தியுடன் பைக்கில் கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தில் உள்ள தனது அக்கா தேன்மொழி வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து அவரது அக்கா மகள் யாழினியையும்(8) அழைத்துக் கொண்டு மூவரும் மாதவச்சேரி கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனராம்.

கீழ்குப்பம் அருகேயுள்ள நைனாா்பாளையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த யாழினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் காயமடைந்த ஆகாஷ், சாந்தி ஆகிய இருவரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.