கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இளைஞா் காயமடைந்தாா்.
சங்கராபுரம் அருகேயுள்ள சித்தேரி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் வீ. சுமன் (26) (படம்). இவா் சேலம் மாவட்டம், தலைவாசலில் புத்தகக் கடை வைத்து நடத்தி வந்தாா். இந்நிலையில், சுமன் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து பைக்கில் ஊருக்கு திரும்பியுள்ளாா்.
சங்கராபுரம் ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த சுமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு பைக்கில் வந்த சங்கராபுரத்தை அடுத்துள்ள சிவபுரத்தைச் சோ்ந்த தெய்வீகன் மகன் கருணாகரன் காயமடைந்தாா்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









