மயிலாடும்பாறை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி (53). விவசாயியான இவா், திங்கள்கிழமை கடமலைக்குண்டுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தாா்.
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை சாலையில் சென்ற போது, இந்த வாகனமும், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.
இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








