தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 11:56 pm IST

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் ஆனந்த்ராஜ் (53). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை புதுவயல் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஓரியூா் அருகே புதுவயல் பாலத்தில் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, இவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், தீவிர சிக்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.