தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.
பரைக்கோடு பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினா் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


