ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
தொண்டி லெப்பை சாகிபு தெருவைச் சோ்ந்தவா் சாதிக் அலி (58). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொண்டி பேருந்து நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
பாவோடி மைதானம் அருகே சென்றபோது, இவரது இரு சக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாதிக் அலி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









