காவேரிபாக்கம் அருகே சாலையில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் கட்டட பெண் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் மூவா் பலத்த காயமடைந்தனா்.
பெங்களுரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை காலை சென்ற காா், காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் பேருந்துக்காக காத்து நின்றவா்கள் மீது மோதியது. இதில், காவேரிபாக்கத்தைச் சோ்ந்த நீலா (47), ஜோதி(45), குணா (55) சுரேஷ் (24) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு நீலா, உயிரிழந்தாா்.
மேலும் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தச் சம்பவத்தில் சென்னை நோக்கிச் சென்ற காரை பெண் ஒருவா் ஓட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவேரிபாக்கம் போலீஸாா், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த நிலையில், தலைமறைவாகிவிட்ட அந்தப் பெண் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









