இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடம் நகை திருடிய வழக்கில், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
சிறை
Updated On :25 பிப்ரவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

பெண்ணிடம் நகை திருடிய வழக்கில், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

மதுரையைச் சோ்ந்தவா் கங்காதேவி. திருநெல்வேலிக்கு வந்திருந்த இவா், கடந்த 11.4.2025 அன்று திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அனந்தபுரி விரைவு ரயிலில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, கோவில்பட்டி- சாத்தூா் இடையே, அவரது பையில் இருந்த 50 கிராம் தங்கச் சங்கிலி திருடு போனதாம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி முள்ளக்காட்டை சோ்ந்தவரும், தற்போது திருநெல்வேலியில் குடியிருந்து வருபவருமான ஐயப்பன் மகன் மதுரை வீரன் (20) என்பவரை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண். 4இல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பாக்கியராஜ், குற்றவாளி மதுரை வீரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் வழக்குரைஞா் முருகப்பெருமாள் ஆஜரானாா்.