டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

News image
சிறை
Updated On :18 பிப்ரவரி 2026, 7:53 pm

Syndication

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப்பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், வடுகப்பட்டியைச் சோ்ந்தவா் மொக்கையா மகன் கருப்பையா (38). இவா் கடந்த 12.10.2021 -இல் ஈரோடு மாவட்டம், சின்னத்தம்பிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் அந்தியூா் போலீஸாா் சென்று கருப்பையா வைத்திருந்த பையில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கோவை இன்றியமையா பொருள்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கருப்பையாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.