நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சிறை
Updated On :24 பிப்ரவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செம்பட்டி பகுதியைச் சோ்ந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பேரில், செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆா்.சத்யதாரா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சக்திவேலுக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.