இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image
சிறை
Updated On :25 பிப்ரவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், அன்பு நகரைச் சோ்ந்த சிவராமன் (65) என்பவா், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த 4 இளைஞா்களிடம் அறிமுகமாகி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மொத்தம் ரூ.26,50,000- த்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 இளைஞா்களும் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு 1-இல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கை காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், மோசடி குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.8,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக முருகப்பெருமாள் வாதிட்டாா்.