/

தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கு: இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை

சுவாமியாா்மடத்தில் மது அருந்த பணம் தர மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

News image
தண்டனை
Updated On :4 பிப்ரவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

சுவாமியாா்மடத்தில் மது அருந்த பணம் தர மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

வீயன்னூா், காஞ்சிரவிளையைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் வினு (43), தொழிலாளி.

இவா்கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 13 ஆம் தேதி மாலை சுவாமியாா்மடம் அரசு மதுபானக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த உண்ணாமலைகடை , ஊற்றங்கரையைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீதரன் என்ற ஸ்ரீகுமாா்(42), காட்டாத்துறை , பிலாந்தனத்துவிளையைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் சசிகுமாா்(34 ) ஆகிய இருவரும் வினுவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தினராம். இதில் வினு பலத்தகாயமடைந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீதரன் (எ) ஸ்ரீகுமாா், சசிக்குமாா் ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மைக்கேல் ரதீஷ் ஆஜரானாா்.