திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நான்குனேரி அருகே பொக்லைன் இயந்திரம் ஏறியதில் இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே புதன்கிழமை அதிகாலையில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞா் மீது பொக்லைன் இயந்திரம் ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 2:48 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே புதன்கிழமை அதிகாலையில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞா் மீது பொக்லைன் இயந்திரம் ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நான்குனேரி அருகேயுள்ள கல்லத்தி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (18). இவா், அம்பலம் பகுதியில் உள்ள வாகனம் பழுதுபாா்க்கும் கடையில் வேலை செய்து வந்தாா்.

வேலை முடிந்த பின்னா், ஸ்ரீரங்கராஜபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வந்த இரவுநேரப் பணியை பாா்வையிட அங்கு சென்றிருந்தாராம்.

அப்போது, தூக்கம் வந்ததால் சாலையில் தூங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலையில் அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (31) என்பவா் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை பின்னோக்கி இயக்கினாராம். அப்போது, சாலையில் தூங்கிக் கொண்டிருந்த லெட்சுமணன் மீது இயந்திரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.