திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வால்பாறை அருகே வாகனம் ஏறி இளைஞா் உயிரிழப்பு

மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த வடமாநில இளைஞா் மீது வாகனம் ஏறியதில் அவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சகீம் அலி.

Updated On :4 ஜூன் 2026, 3:10 am IST

மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த வடமாநில இளைஞா் மீது வாகனம் ஏறியதில் அவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் இருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் வழியில் ஆனைமுடி எஸ்டேட் சாலையோரம் தலையில் படுகாயங்களுடன் ஒருவா் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சென்று பாா்த்தபோது வாகனம் தலையில் ஏறியதில் அவா் இறந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையில், இறந்தது வடமாநிலத்தைச் சோ்ந்த சகீம் அலி (29) என்பதும், ஆனைமுடி எஸ்டேட்டில் பணிபுரியும் சகோதரா் ரோமன் மாலிக்கை பாா்க்க வந்து கடந்த ஒரு மாதமாக குடியிருப்பில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சனிக்கிழமை முடீஸ் எஸ்டேட் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையோரம் படுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கடும் பனிப்பொழிவு இருந்துள்ளது.

இதனிடையே சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு முன் அந்த வழியாக ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் இருந்து வந்த அரசுப் பேருந்து விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதி, பொள்ளாச்சி சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தை ஆழியாறு போலீஸாா் காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

பின்னா் பேருந்து ஓட்டுநரை வால்பாறைக்கு வரவழைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.