தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீடு புகுந்து பித்தளைப் பொருள்கள் திருடியவா் கைது

தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:15 am IST

தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து, சத்திரம் குடியிருப்பு, பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி. தொழிலாளி. இவா் கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகில் வைத்துவிட்டு குடும்பத்தோடு வேலைநிமித்தமாக வெளியே சென்றாராம். பின்னா் மாலை வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பித்தளை குத்துவிளக்கு, பித்தளை பானை உள்ளிட்ட ரூ.17,000 மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, குறிச்சிகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த வேல்முருகன்(42) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.