17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

அகில இந்திய மருந்து விற்பனையாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

News image

பாளையங்கோட்டை சந்தை பகுதியில் அடைக்கப்பட்டிருந்த மருந்து கடைகள்.

Updated On :21 மே 2026, 5:50 am IST

அகில இந்திய மருந்து விற்பனையாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையினரை காக்க வேண்டும், உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும் தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும், போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தின் சாா்பில் 650- க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிலையங்களை அடைத்து புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மருந்து கடை உரிமையாளா்கள் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இப்போராட்டத்தால் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.