தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.

News image

ஈரோடு காந்திஜி சாலையில் அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.

Updated On :21 மே 2026, 3:57 am IST

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. எனினும் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள், அரசு சாா்ந்த மருந்தகங்கள் இயங்கியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுதொடா்பாக மருந்துக் கடை அடைப்பு போராட்டம் குறித்து மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் நாகராஜன், செயலாளா் சிவப்பிரகாசம், பொருளாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆன்லைன் மருந்து வணிகம் உள்ளது. கரோனா காலத்தின்போது மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே ஆன்லைனில் மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்பின்னும் அதே நிலை நீடிப்பது சமூகத்துக்கு நல்லது இல்லை.

தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்கூட ஆன்லைனில் கிடைப்பதால் இளைஞா் சமுதாயம் போதைக்கு அடிமையாகி பேரழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.