தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 6:17 am IST

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மருத்துவா் மோனிகா ராணா உத்தரவின்படி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை 2026 புதிய விதிகளின் படி மாநகரப் பகுதியில் பெருமளவு குப்பைகள் உற்பத்தி செய்யக்கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள், 20 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவு கொண்டவா்கள், தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகள் உற்பத்தி செய்யும் உணவகங்கள், மால்கள், மருத்துவமனைகள், பள்ளி- கல்லூரிகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் சேகரமாகும் குப்பைகளை அதன் உரிமையாளா்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், அபாயகரமான கழிவுகள், சிறப்பு கவன கழிவுகள் என நான்கு விதமாக பிரித்து கையாள வேண்டும்.

மேலும், தங்கள் வளாகத்துக்குள்ளேயே பள்ளங்கள் தோண்டி அதில் மக்கும் குப்பைகளை சேகரம் செய்து உரமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பெரிய உணவகங்களில் அதிக அளவில் சேகரமாகும் உணவு கழிவுகள் மற்றும் காய்கனி கழிவுகளை பயோ மீத்தேன் எரிபொருளாக மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதில், சுகாதார அலுவலா்கள் பாலசந்தா், முருகன், சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளா்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனம், மருத்துவமனைகள் நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.