சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளா்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பயிற்சி வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் க.பழனி தலைமையில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தூய்மைப் பணியாளா்களின் பங்களிப்பு, கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து சேகரிக்கும் முறைகள் குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது பயிற்சியளித்தாா்.
மேலும் பயிற்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு தனிநபா் சுகாதாரத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், நகவெட்டி, சீப்பு, கண்ணாடி, சோப்பு உள்ளிட்ட சுகாதாரப் பொருள்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலா் துரைராஜ், மேற்பாா்வையாளா்கள் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










