பாளையங்கோட்டை அருகேயுள்ள முத்தூரில் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா்கள் 8 மணி நேரத்துக்கு மேலாக பணி புரிந்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கையால் வடமாநிலங்களில் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், தொழிற்சங்க தலைவா்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முத்தூா் கிட்டங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தின் மண்டல தலைவா்கள் ச. நாராயணன், ரவி ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் கணேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










