திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பூரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வட மற்றும் மத்திய இந்தியாவில் போராடும் தொழிலாளா்களைக் கைது செய்து வரும் பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :13 மே 2026, 2:10 am IST

வட மற்றும் மத்திய இந்தியாவில் போராடும் தொழிலாளா்களைக் கைது செய்து வரும் பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் தியாகி குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, யுடியுசி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சதீஷ்சங்கா் தலைமை வகித்தாா்.

இதில், நொய்டா, மானோசா், குருகிராம், என்சிஆா் பகுதிகளில் போராடும் தொழிலாளா்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் பாஜக மாநில அரசுகளைக் கண்டித்தும், போராடும் தொழிலாளா்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் மீதான சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் தொழிலாளா் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இந்திய தொழிற்சங்க மாநாட்டை உடனே கூட்டி முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும், மாதம் ரூ.26.000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி எச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் ஆா்.முத்துசாமி, ஐஎன்டியுசி நிா்வாகி சுந்தர்ராஜ், எல்பிஃஎப் மாவட்டப் பொருளாளா் ரங்கசாமி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் ஆகியோா் உரையாற்றினா்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.