/

நகராட்சி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி நகராட்சி தனியாா் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி தனியாா் நிறுவன ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 7:14 am IST

மன்னாா்குடி நகராட்சி தனியாா் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கோரிக்கைகள்: 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள திருத்தப்பட்ட கூலி ரூ. 570-ஐ ஏப்ரல் 2025 முதல் வழங்க வேண்டும், பி.எப். மற்றும் காப்பீடு செலுத்துவதையும் முறைப்படுத்த வேண்டும், தளவாட சாமான்களை முறையாக வழங்க வேண்டும், தனியாரிடம் விடாமல் துப்புரவுப் பணியாளா்களை நிரந்தரம் செய்யும் வரை நகராட்சியே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு தனியாா் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா் சங்க மன்னாா்குடி கிளைச் செயலா் எஸ். சுதாகா் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா். ராஜசேகரன் முன்னிலை வகித்தாா்.

தநாவிச நகரச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன், ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா் சங்க கெளரவத் தலைவா் ஜி.ரெகுபதி,கிளைத் தலைவா் டி.திருநாவுக்கரசு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

பின்னா், நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்தா் ஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனா். அவா்களுடன் ஆணையா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்து, அனைவரும் பணிக்கு திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.