தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் வேலையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு சட்டப்படியான கூலி ரூ. 336ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருவையாறு ஒன்றியம், காருகுடியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், விளாங்குடியில் சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி. செந்தாமரைச்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், தியாகராஜன், கலியபெருமாள், ஜானகி, சிவகாமி, பரமேஸ்வரி, திவ்யகுமாரி உள்பட ஏராளமான விவசாயத் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










